Saturday, January 30, 2010

Share

தனிமையிலே....

காத்திருந்தேன் அவனுக்காய்
காணவில்லை அவன் நிழல்
காதலில் தோற்றுவிட்டேன்
காதலின் பிரிவாலே.....

பிரிந்திட்ட உன் பிரிவு
நிரந்தரம் என்றறிந்தும்
தேடுகிறேன் உன்னை
கூறிட என் கதையை......

தனிமையில் சில நிமிடம்
தவிப்பினில் சில நிமிடம்
இருட்டினில் அழுவதால்
அறிந்திடர் யாரும்......





Friday, January 29, 2010

Share

உன் நினைவலைகள்..

 இரவின் பிரிவில்
எனை தொடரும்
நிழல் பிரிகிறது
ஊர் உறங்குபொழுதிலும்
எனை விட்டு பிரியாமல்
தலையணை கண்ணீர்
தருகிறது
உன் நினைவலைகள்...l
Share

கண்ணின் வேதனை....

 அவனை கண்ட நாள் முதல்
இமைகள் துடிக்க மறுத்தன
விழிகள் தூங்க மறுத்தன
இருப்பினும்
விழிமூடி தூங்கினேன்
தூக்கத்திலும் கனவாக அவன்....

காதலில் தவித்தன என் மனம்
காதலை சொல்லிட துடித்தன உதடுகள்
தேடின என் கண்கள் அவனை
காட்சியாய் காதலியுடன்
கலகல சிரிப்புடன் என் எதிரில் அவன்...
Share

நீங்காத நினைவுகள்

 நீங்கிவிட்ட உன்னிடம் கிடைத்திட்ட
நீங்காத நினைவுகள் என்னுள்
தனிமையில் தவிப்புகள்
 ததும்பிடும் கண்ணீராய்...
இளமையின் இனிமைகள்
இறப்பின் நினைவுகள்
இதயத்தில் பதிந்தன
சுவடுகளாய் .......

Tuesday, January 26, 2010

Share

வாழ்வா? சாவா?

 வாழ்வா ? சாவா?
விடை சொல்ல நீ வேண்டும்
வாழ்ந்திட ஆசைப்பட்டேன்
உன்னை பார்த்த போது-உன்
என் சோகத்தில் அன்பான வார்த்தை
ஆறுதல் பேச்சு வாழச்சொன்னது.
நீயில்லா இன்றய வாழ்வு -உயிர்
நீத்திட என்னுதன்பே...
வந்திடு முடிவை தந்திடு.


Share

பிரிவின்றி...

பட்டாம் பூச்சியாய்
உன் நினைவுகள்
பறக்கின்றன  என்னுள்.
 உன் சீண்டல்களும்
பரவசமமூட்டும் 
உன் பார்வையையும்
பிரிவின்றி வாழ்ந்திட 
வேண்டுது என் மனம்..

Share

கண்கள்..

 உன்னை
பார்த்த என் கண்கள்
உதட்டிடம் பேச சொல்லிட
உதடுகள் மனதிடம் என்ன பேச
உதட்டோரம் இதயம் கூறியது
உண்மையை பேசிடு
உன்னவளாய் என்றும் அவள் இருப்பாள்"

Sunday, January 17, 2010

Share

ஒரு உறவு போதும்...

 உரிமை சொல்ல
உறவுகள் பல இருந்தும்-என்
உள்ளம் அறிந்த  ஒரு
உறவு நீயல்லவா அன்பே...

உன் உறவு போதுமன்பே 
உறவுகள் வேணாம் அன்பே..
ஊரறிய வாழந்திடலாம்...

Friday, January 8, 2010

Share

நீங்காத நினைவுகள்

 கண்ணீருடன் என் காலங்கள் 
கடந்து தான் போகின்றன-என் 
கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீர் துடைத்திடும் -என்
கண்ணாளன் நீயெங்கே.....
நீங்கா உன் நினைவுகள் 
நீடிக்கின்றன என் வாழ்வில்
நீழும் என் துன்பம்
நீக்கிட நீ வந்திடு....