Friday, March 19, 2010

Share

அன்புக்கு நேரமில்லை !!!!!!

ஆரவாரம் மிகுந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை
அமைதியற்ற வாழ்க்கை -அதில் 
 அன்புக்கு கிடைக்கவில்லை நேரம்
சொற்கள் ஆயிரம் அதை
கேட்பவர் இங்கு யாருமில்லை
வேதனைகள் ஆயிரம், ஆயிரம் -அதை
விளங்குபவர்கள் யாருமில்லை
வரம்புமீறிய வருமானம்-அங்கே
வரவரக்குரைகின்றது மனிதநேயம்
தேவைகள் தினம் தினம் அதிகம்
தேடல்களும் மிதமிஞ்சி செல்கிறது
வாழ்க்கையில் பொறுமைக்கு நேரமில்லை-அதனால்
வயிற்றைக் குடைகின்றது வறுமையின் கொடுமை
வெறுமை நிலையென்றால் அங்கே வேதனைகள்தான்
அதுதான் மனிதனின் ஆரவாரம் நிறைந்த வாழ்க்கை !!!!!!!!



வே.சுதன்
பிரான்ஸ்

(படித்ததில் பிடித்தது)

0 comments: