Saturday, May 29, 2010

Share

உன்னை நினைக்கிறேன்…

நடக்கும் நினைவுக்
கால்களை தடுக்க முடியாது
தவிக்கிறது மனது......
எண்ணத்தை மாற்ற
எதை எதையோ செய்கிறேன்
கதைக்கிறேன், சிரிக்கிறேன்
கடுமையாய் உழைக்கின்றேன்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உன்னை மறக்கத் துடிக்கிறேன்
நினைவுகள்   நீள்கிறது…


Share

என் கனவுகள்

 வெட்ட வெளிவானத்தில்
நிலவோடு துணையாக
என் கனவுகள் - உன்
நினைவுகளோடு உலாவுகையில்
எட்டி நின்று பார்க்கின்றது
நட்சத்திரங்களோடு இமையோர
கண்ணீர்த் துளிகளும்......

Wednesday, May 26, 2010

Share

உயிர்ப்புள்ளி

வலியே நீயென
என்னை விலக்குகிறாய்
உயிரே நீயென
உன்னை பூட்டுகிறேன்..

கண்ணீரென என்னை
ஓதுக்குகிறாய்
என் கண்ணே நீயென
அணைக்கின்றேன்...

என் துன்பம் நீயென
வெறுக்கிறாய்
என் இன்பமே நீயென
அழைக்கிறேன்...

என் வாழ்வின் கரும்புள்ளி
நீயென கூறுகிறாய்
அன்பே என் வாழ்வின்
உயிர்ப்புள்ளி நீயல்லவா..!

Saturday, May 22, 2010

Share

காயம்

crying eyes with peace dove Pictures, Images and Photos

நீ தந்து விட்டுச் சென்ற
நினைவுச் சின்னங்கள்
இதயத்தை கீறிச் சென்றிட
கண்கள் கண்ணீரை தூதனுப்ப
உயிர் வலியினில் துடிக்கின்றது...


Share

காதலின் பரிதவிப்பு

கண்களுக்குள் ஏன் நுழைந்தாய்
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...

என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....

கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....


Thursday, May 20, 2010

Share

உனக்கு மட்டும் தனியிடம்..

என் வாழ்வில் 
உனக்கு மட்டும் தனியிடம்..
நான் விரும்பியது
  எல்லாம் கிடைக்க..
கிடைக்காத ஒரே 
ஒரு பொருளாய் நீ !

Monday, May 17, 2010

Share

பிரிவுகள் நிரந்தரம்

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன்
என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை
சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ
முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்

நான் பேசிய
வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து
போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த
உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள்
என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கும்..

Friday, May 14, 2010

Share

உன்னை தெரிந்து கொண்டேன்...

வெளியே எடுக்க
நினைத்த போது தான்
தெரிந்தது நீ எத்தனை
ஆழமாக உள் சென்றுள்ளாய்
என்று....

பிரிக்க முயன்ற போது
தான் தெரிந்தது நீ
ஒட்டி பிணைந்து ஒன்றாக
மாறியிருந்தது...

மாற்ற நினைத்த
போது தான் தெரிந்தது
நீ என் ரத்தத்தில்
ஒன்றாக கலந்தது.....

என் உயிரே!!
உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்...
இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை...
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்...
எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்...
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....

உணர்வோடு கலந்து
உயிரோடு உறவாடி
அரவணைத்துக் காக்க
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார் இவ்வுலகில்….

உன்
அன்பு மழைத்துளி ஒன்று
என்மேல் விழாதா என
ஏங்கித் தவித்து
அன்பும் பிச்சை கேட்கும்
அனாதை ஜீவனாய் நான்….
நீயும்
என்னை விட்டு விடாதே