Monday, May 17, 2010

Share

பிரிவுகள் நிரந்தரம்

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன்
என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை
சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ
முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்

நான் பேசிய
வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து
போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த
உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள்
என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கும்..

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

///////

ரசனையான வரிகள் மிக அருமை

சிந்தையின் சிதறல்கள் said...

நிதர்சன வரிகள் என்னோடு என்னவள் பேசுவதாய் நான் உணர்ந்த வரிகள் பாராட்டுகள்
மிக்க நன்றி