Wednesday, May 26, 2010

Share

உயிர்ப்புள்ளி

வலியே நீயென
என்னை விலக்குகிறாய்
உயிரே நீயென
உன்னை பூட்டுகிறேன்..

கண்ணீரென என்னை
ஓதுக்குகிறாய்
என் கண்ணே நீயென
அணைக்கின்றேன்...

என் துன்பம் நீயென
வெறுக்கிறாய்
என் இன்பமே நீயென
அழைக்கிறேன்...

என் வாழ்வின் கரும்புள்ளி
நீயென கூறுகிறாய்
அன்பே என் வாழ்வின்
உயிர்ப்புள்ளி நீயல்லவா..!

0 comments: