Tuesday, June 1, 2010

Share

தெரியவில்லை

அமைதியே உருப்பெற்ற உன்னிடம்
எப்படி வந்தது இந்த அகங்காரம்...

பூமாதேவியே நீயென பார்த்து
பொறாமைப்பட வைத்த
உன் பொறுமை எங்கே
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டதா...

அமைதியே வடிவான உன் திருமுகம்
இன்று அமைதியற்ற கடல் போல்
ஆர்ப்பாரித்துக் கொண்டு இருக்கின்றதே....

எதை மறைக்க போடுகின்றாய்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும் வலிகளையா
காரணம் சொல் பெண்ணே..

0 comments: