Thursday, June 10, 2010

Share

ஜொலிக்கிறேன்

என் வானத்தில் ஓரு நொடி தோன்றி
மறைந்திடும் வானவில்லல்ல நீ
என் இன்பத்தில் மிளிர்ந்து
என் சோகத்தில் பொலிவிழந்திடும்
வெண்ணிலவு நீ.....

எனது தூக்கத்தில் வளர்ந்திட்ட
அழகிய கனவு நீ....
என் நடைபாதையில் துணைவரும்
தென்றல் காற்றும் நீ...

என் இதயத்தின் வழியே நுழைந்த
உன் காதல் என் கண்களின் வழியே
கண்ணீரென பாய்கின்றதே
உன் மெளனம் தாங்காது....

உன் மேல் துளிர்த்திட்ட பாசம்
வானமென வளர்ந்திட
உன் கோபத்தில் தேய்ந்து போகின்றேன்
பெளர்ணமி நிலவென...

மழை நீரென என்னில் பொழிந்து
என் வாழ்வை பசுமையாக்கியவளே
பார்வையற்றுப் போகின்றேன்
உன்னைக் காணாத நாட்களில்....

காலைநேர பனித்துளி சூரியனின் ஓளிபட்டு
வைரமென ஜொலிப்பது போல்
உனதன்பு பட்டு நான் பிரகாசிக்கின்றேன்
இருளிலும் ஓளியென....

(இனியவள்)
(படித்ததில்  பிடித்தது)

2 comments:

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே............