உன் பிரிவில் உணர்ந்தேன்
வலியின் வலிமை....
உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...
உன் நிழல்களைக் கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது என்னிரு விழிகள்.....
பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....
உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....
2 comments:
நல்ல கவிதை...
அருமையான வரிகள்
Post a Comment