Monday, June 21, 2010

Share

என்னவளே...!!!

வஞ்சிக்கொடியே
வாஞ்சையுடன் என்னோடு
கொஞ்சிப் பேசிப் பேசி
கொள்ளை கொண்டவளே

எனக்கே தெரியாமல்
என்னுள் புகுந்து
என்னையே கேட்காமல்
எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்
என்னை செல்லமாக அழவைத்தாய்
என்னுள் உனைத் தேடிக்கொண்டே
உன்னில் எனை தேட வைத்தாய்

கண்டேன் எனை உன்கண்ணில்
கொண்டேன் அளவில்லா இன்பம்
மீண்டும் எனை நீங்கி
சென்றாய் உன் இருப்பிடம்

சற்றேனும் எதிர்பாராபோது
சினுங்கிய தொலைபேசியில்
உன் அன்பான குரல் கேட்டு
ஆனந்தம் கொள்ளுதடி
என் இதயம்...


2 comments:

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி.........