Sunday, June 27, 2010

Share

அவள்

மனந்தனிலே காதலாய் மலர்ந்தாள்
மலர்களிலே முல்லையாய் மணந்தாள்
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள்
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள்
கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள்
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள்
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள்
அவனியிலே மறுபிறவி இருந்தால்
அவளுடனே வாழும் வரம் அளித்தாள்
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த
சுகத்தால்
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும்
கழித்தாள்
வாழ்வினிலே நானென்றும் மணந்தால்
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்.

2 comments:

மதுரை சரவணன் said...

//கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்//

அவளையே மணக்க வாழ்த்துக்கிறேன். கவிதை அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன் :-)