Sunday, July 4, 2010

Share

ஆசை.......

உன் அரவணைப்பினில்
கொஞ்சிடும் குழந்தையாய்
தவழ்ந்திட ஆசை...

உன் இன்னிசையில்
ராகமாய் மாறிட
ஆசை...

உன் சுவாசத்தின்
காற்றாய் மாறிட
ஆசை...

உன் உதட்டில்
புன்னகையாய்
வாழ்ந்திட ஆசை...

உன் இதயத்தில்
இரத்தோட்டமாய்
ஓடிட ஆசை...

உன் மனதினிலே
எண்ணங்களாய்
உருப்பெற ஆசை...

கடைசி வரை உன்
நாமத்தை உச்சரிக்க
ஆசை...

உன் கண்களில்
ஓளியாய் வாழ்ந்திட
ஆசை...

என் வாழ்வின் துன்பமான
உன் காதல் நினைவுகளை
தென்றலாய் கலைத்திட
ஆசை....

வானத்தில் நிலவாய்
இயற்கையின் பசுமையாய்
பூக்களில் வாசமாய்
என் வாழ்வின் வலிகளை
புற்களாய் கலைந்திட
ஆசை...

3 comments:

Unknown said...

உங்கள் கவிதைகள் அருமை. ஒவ்வொரு கவிதையிலும் காதலின் வலி புரிகின்றது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே.....