Saturday, July 24, 2010

Share

கண்மணியே !!..

 
மறந்திடுவாயோ அன்பே
என் மௌனராகத்தை
என்றுமே நிலைக்காத
என் இதயராகத்தை ...

காணாமல் இருந்தால்
கரைபுரளும் கண்கள்
கடந்த காலமெல்லாம்
கைப்பிடித்த விரல்கள் ...

மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...

பேசாமல் இருந்தால்
மௌனமாய் அழுதிருக்கும்
என்றுமே இமையாக
ஏக்கமாய் தவித்திருக்கும் ...

மறந்திடாதே அன்பே
உன் உயிரிதனை...
அதுவும் மறைந்திடுமே
இவ்வுலகை மறந்தே ..

2 comments:

மதுரை சரவணன் said...

//மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...//

vaalththukkal

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றது.