Wednesday, July 14, 2010

Share

காந்த விழிகள்.....

ஓடும் நீரையும் சிறைபிடிக்கும் புகைப்படமாய்...
நகரும் என் நிகழ்காலத்தைச்
சிறைபிடிக்கிறது உன்
காதல் கயல்விழிகள்...

எனை வஞ்சிக்கும் எண்ணமோ வஞ்சியுனக்கு?
காதற்பஞ்சும் கன்னி உன்
பார்வை நெருப்பும்
பற்றிக்கொண்டு எரியுதடி
 என் நெஞ்சில்...

உன் ஒற்றைத்துளிக் கண்ணீர்
எனக்கெனச் சுரந்தால் போதுமடி...
என் நெஞ்சத்து நெருப்பணைத்துக் குளிரூட்ட...
தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!

எதிரெதிர்த்துருவங்கள் ஈர்க்குமாமே!
நீ என்னை ஈர்க்கிறாய்...
உண்மையைச் சொல்...
நான் உன்னை???...

2 comments:

http://rkguru.blogspot.com/ said...

அட்டகாசமான கவிதை........வாழ்த்துகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.