Sunday, August 1, 2010

Share

தோழியே எனக்குள் நீ

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர்
கொண்டு பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க
மலரும் மலரல்ல - உன்
மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை
காதல்...

ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..

நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள்
என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக
மாற வேண்டும் என்றால்
நட்பை நேசி - நான்
உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

3 comments:

http://rkguru.blogspot.com/ said...

super......

Unknown said...

nice....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே. உங்கள் பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றது.