Monday, August 2, 2010

Share

இது என்ன வாழ்க்கை.....

  இது என்ன
வாழ்க்கை
என்ன தவம்
செய்து பிறந்து
விட்டேன் ...

நின்மதி இழந்து
நிதமும் நான்
தவிக்கிறேன் ..
உள்ளதை உள்ளபடி
உண்மைகளையும்
சொல்ல முடியவில்லை

பேச மொழி
தெரிந்தும் உண்மைகள்
என் பக்கம் இருந்தும்
சொல்ல மொழி
தெரியவில்லை
எனக்கு..

என் வாழ்வில்
ஏக்கம்... வெறுப்பு ...
கவலை ....விரக்கதி ....
வேதனை நிறைந்து
வழிகின்றன ...

சொல்ல ஒரு
உறவும் இல்லை
சொல்லி அழ
வழியும் இல்லை ..
என்ன தவம்
செய்து பிறந்து
விட்டேன் ...

ஒ தெய்வமே ...
எல்லாம்
கொடுத்தாயே
அழகான வாழ்வை
கொடுக்க மறந்தது ஏன்..

இவை அனைத்தும்
ஏன் என்
உயிரையும்
சேர்த்து நீயே
எடுத்துகொள்...

0 comments: