Friday, December 31, 2010

Share

புதுவருட வாழ்த்துக்கள்

 அதிசயங்கள் பல நிகழ்த்தி
சாதனை பல புரிந்து
சோதனைகள் வேதனைகளை
ஏற்படுத்தி இனிதே
விடைபெறும் 2010 ஆண்டே
இன்முகத்துடன்
வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைக்கின்றோம்....
  புத்தொளி பரவி நிற்க
புது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோட
இன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே....
 பிறக்கும் புத்தாண்டு  புனிதமாய் 
புதுமை புரட்சியோடு 
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....

உங்கள் தோழி பிரஷா

Wednesday, December 29, 2010

Share

வாழ்க்கையின் விலை...

 திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள் - இல்லை
அதில் உண்மை...
இஸ்டப்பட்ட இதயங்களை
இணைய விடாது தடுப்பது
கண்களில் கலந்து
கருத்தெருமித்து
காதலால் சேர்ந்தவர்களை
பொன் பொருள் வேண்டி
பேராசை கொண்டு
விலை மதிப்பிட்டு
சந்தையில் விந்திடும்
சங்கடம் இது...........

Tuesday, December 28, 2010

Share

எனதாகி...

அவர்கள் எல்லோரும்
உன்னை
வலுக்கட்டாயமாக
காதலிடம் சரணடையச்
சொன்னார்கள்
நீ என்னிடம்
சரணடைந்த சேதி
தெரியாமல்.....

Saturday, December 25, 2010

Share

ஆழிப்பேரலையே..

 ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்...

Friday, December 24, 2010

Share

முத்தம்

 கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை

உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்

சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது

அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...

Wednesday, December 22, 2010

Share

என்னுள் காதல்............

 ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....

குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...


Monday, December 20, 2010

Share

உன் சந்தேகத்தால்

 உன் சந்தேகத்தால்
உடைந்து என் மனம்
உருகுகிறது என் உள்ளம்
ஊமையாய் என் உதடுகள்
உயிரின்றி என் உடல்
ஊசலாடுது தனிமையில்..

நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...
Share

உன் காதலினால்......

 அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்
என்னை ஸ்பரிக்கையில்
புதிதாய் பிறக்கின்றேன் இன்று
என்னில் இனம் புரியாத இன்பம்
ஒட்டிக் கொண்டதாக உணர்கின்றேன்
புதிதாய் ஒன்றை சுமப்பது போல
இதயம் பட படக்க
இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......

Friday, December 17, 2010

Share

தனிமையில் நான்..

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டது மதிகெட்ட பேதை உனக்கு(02) இதற்கான பதில் கவிதை அவளால் எழுதப்பட்டது.... யாவும் கற்பனை)
 
உன்னருகில் இருக்கையில்-உன்னை
புரிந்திடா என் உள்ளம்
உன் வார்த்தை வரிகள் கண்டு
சிலிர்க்கிறது உள்மனம்-ஆனால்
உணர்வுகளை பரிமாற முடியா
பாவியாய் நான் இங்கு
தனிமையல் தவிப்பது
உறவுகளுக்கு புரியவில்லை....
உனக்கும் தெரியவில்லை....

உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்

தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம் 
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து  உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்

ஆதங்கத்தில் என் மனம் இங்கு
ஏதும் தெரியாம உன்மனம் அங்கு
பகிர்ந்துள்ளேன் உன்னிடம்
பதிலை தந்திடு........

Tuesday, December 14, 2010

Share

மதி கெட்ட பேதை உனக்கு...

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டதாக....யாவும் கற்பனை)
 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

Monday, December 13, 2010

Share

உன் நினைவுகள்

தேய்பிறையாய்  என் காதல்-ஆனால்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
என்னுள்  நித்தமும்
வளர்கின்றன....
 

Saturday, December 11, 2010

Share

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....


Thursday, December 9, 2010

Share

மீண்டும் கிடைத்திடுமா???

  இயற்கை காற்று  அள்ளி வீசம்
இதமாய்  வீசும் காற்றுடன் முல்லை வாசம்
இயற்கையாய் வளர்ந்திட்ட வேப்பமரம் 
சோலை நடுவே எம் வீடு  
சோதனையிலும் சந்தோஷங்கள்
ஆலமரமாய் சொந்தங்கள்  
ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்.....

பட்டினி இருந்திருப்போம் - அப்போதும்
பசி மறந்திருப்போம்
வறுமையிலும் சந்தோஷம் 
வாடிடாத அன்னை முகம்.......

எல்லயைில்லா வானமதில்
எண்ணமுடியா நட்சத்திரங்கள்
நடுவிலே வலம் வரும்
 முழு மதியை ரசத்திருப்போம்
முற்றத்தில் ஒன்று கூடி ....

எம் மண்ணின் இனிய வாழ்வு
கிடைத்திடுமா மீண்டும் ...
சோலைவனமாய் இருந்த இடம்-இன்று
பாலைவனமாய் ஆனதே..

ஆசையாய் வளர்த்திட்ட சோலை இல்லை
இயற்கையாய வளர்ந்திட்ட ஏதுமில்லை
தனித்தனியே  சிதறுண்டது உறவுகள்
தனிமையில் கதறுகிறாள் அன்னையவள்...


"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"



Tuesday, December 7, 2010

Share

துரோகி உனக்காக....

 என் உள்ளமறிந்த நீயே
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை.. 
உன் நினைவுகள் 
என்னுள் மந்திரமானதால்
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....

Monday, December 6, 2010

Share

வாழ்வும் இல்லை சாவும் இல்லை...

 சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....


Friday, December 3, 2010

Share

விழியிலே என் விழியிலே...



 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....

Thursday, December 2, 2010

Share

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...