Monday, February 28, 2011

Share

நெஞ்சம் பொறுக்குதில்லை.!

நிலைமாறும் உலகில்
விலை போகும் மாதர்
நிலைதனை நினைக்க
நெஞ்சம் பொறுக்குதில்லை

பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ

வறுமையின் கொடுமையிலே
வயிற்று பசி போக்க
வசதி படைத்தோரிடம்
வயிற்றை நிரப்பிட்ட
நிலையிதுவோ

கோடி பொருளுக்காய்
நாடியே வந்தவன்
கூடியே வாழ்ந்திற்று
கூட்டிக் கொடுத்திட்ட
நிலையிதுவா..

பருவ வயதினிலே
பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..

குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா

அற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாது
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...

Thursday, February 24, 2011

Share

மூன்று இதயங்கள்..!

 வஞ்சி அவள் நெஞ்சமதில்
கஞ்சதனமெதுமின்றி
பஞ்சமில்லா அன்பினிலே
விஞ்சியிருந்த அவன் - மண
மஞ்சமதில் மங்கைதனை
மாற்றன் மனையாளாக
மண வாழ்து தூவுகின்றான்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!

முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!

சனக் கூட்டம் மத்தியிலே
சந்தோஷ ஊஞ்சலிலே
சாதித்த பெருமையிலே - இவன் கூட
சங்கமித்த இதயங்களின்
சங்கடத்தை அறிந்து விட
சந்தர்ப்பம் ஏதுவுமில்லை..!

விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ...!

உடலால் வடிவமைக்கப்பட்ட அழகிய வடிவங்கள்.

Monday, February 21, 2011

Share

கன்னி இவள் சாபம்..!

 வண்ண வண்ண புள்ளி வைத்து
வரைந்து சென்ற
வாழ்கை கோலமதை...!
எண்ணாமலே அவன் விட்ட
வார்த்தை என்னும் அம்பு - அவள்
கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும் உதிரத்தை
ஊற்றெடுக்க வைக்கிறது...!

கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க  சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!

அயலும் உறவும் இணைத்ததினால்
அறிந்தவர் புரிந்தவர் கூடி
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல
சொந்தங்களும் எண்ணவில்லை...!

எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!

Thursday, February 17, 2011

Share

பிரியா நட்பு...!

 சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!

Sunday, February 13, 2011

Share

Happy Valentine's Day.

காதல் ஜோடி.!
இரு உள்ளம் தனித்திருந்து காதல் மொழிபேசி
இளமை சில்மிசங்களை தமதாக்கி
இன்பதுன்பம் பகிர்ந்து கொஞ்சிப்பேசி 
இனிய சுதந்திர பறவைகளாய்
இசையாடிடும் ஜோடியே காதல்ஜோடி....!
*****************************
காதல் பரிமாற்றம்.!
தனிமையின் தவிர்பை தவித்து
தம்முள்ளங்களை பரிமாறி..
புன்னைகையும் பூரிப்பமாய்.
புதுவுலகில் பயணிக்க  இரு இதயம்
மலருடன்  மனதையும்  மகிழ்வுடன்
ஒரு இதயமாக்கி காதலை பரிமாறுகின்றன.!
*****************************
  இரு உள்ளங்கள்
அன்பிற்கு அடிபணிந்து  ஆசைகளை வெளிப்படுத்தி
 இன்பங்களை இசைமீட்டி  காதல் உரசலில்
ஊஞ்சலாடுது இரு இதயம் .....!
கட்டி அணைத்திடும் கண்ணாளன் கைகளுக்குள்
குட்டிக்குழந்தையாய் அவன் கையில் அவளின்று...!
*****************************
ஓரு தலைக்காதல்.! 
பக்கத்தில் இருக்கையிலே 
பாசமான அவன் பேச்சு.!
பரிவான அவன் பார்வை .!
என்னை தொட்டு செல்லும் 
அவன் சுவாசக்காற்று.!
வளர்த்தேன் என்னுள் காதலை.!
காலத்தின் கோலத்தால் 
உருவமற்ற என் காதல் 
உணர்வற்று உறங்கியது என்னுள் 
ஒரு தலைக்காதலாய்.!
என் காதல் உண்மை காதல் -  அதலால்
 என்னை சுற்றி காதல் நினைவுகள்
பட்டாம்பூச்சியாய்  என்றென்றம்
என்னுள் வாழ்ந்திடும்.!
 *****************************
காத்திருக்கும் காதல்
காத்திருந்து  காலங்கள் ஓடுதன்பே...!
உன் வருகைக்காய்- என்
பூவிழிகள் தேடுதன்பே...!
உன்னுடனே நான் நடந்த தேசமெல்லாம்
தனிமையிலே நான் நடந்து
தவிப்பினை குறைத்திடுவேன்.!
பிரிவுகளால் தவித்திடினும்
பிரியா நம் காதலுடன் 
காத்திருக்கேன் உனக்காக....!
*****************************
பள்ளி பருவ காதல்
 ஊருகள் பல தாண்டி
உரிய புள்ளி பெற்றதினால்
உயர்தரம் படிக்க வந்தவர்கள்
உணர்வுகள் பல பகிர்ந்தே
உறவு கொண்டாடி மகிழ்கையிலே
உள்ளங்கள் இரண்டெங்கே
உரிமையை தமதாக்கி
புது பந்தத்தில் தமது
பயணத்தை தொடர்கின்றது.

பயணிக்கும் பாதையில்
பள்ள-மேடு பல இருப்பதினால்
பள்ளி படிப்புடனே
பக்குவத்தையும் சேர்ந்தே
துல்லியமாகவே
தூரத்தை இலக்கு வைத்தே
துணித்தே தொடர்தமையால்
தூசாய் போயிற்று துன்பமெல்லாம்..

தேவைகளை தேர்ந்தெடுத்து
தேர்வுகளில் கால் பதிந்து
புரிந்துணர்வை புறத்தே கொண்டு
புறப்பட முன் சிந்தித்து
சிந்தனையை திறனாக்கி
தினமும் வளர்ந்தமையால்
வையத்தில் வழமுடனே
வாழ்கின்றனர் என்றென்றும்..!
*****************************

Saturday, February 12, 2011

Share

திசைமாறும் உலகில்.!

தனிமையில் பேசிட 
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய் 
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!

அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!

மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!

அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!

அவன் ஏக்கமாய்  நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!

மனதோடு போராடி  மரணித்த மனதுடன்  போகின்றேன் 
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு  மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று 
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!

தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல் 
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!

மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து 
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!

Thursday, February 10, 2011

Share

அன்று.! இன்று!

பகுதி-01
                            ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.   

                                                                        இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

                                           ஜெனனி நகரத்து பல்கலை கழகம் நோக்கி தனது பயணத்தை   ஆரம்பித்தாள்.  முதலாவது  நாள் பல்கலைகழகம் போனால் அங்கு புதிய முகங்களை காண மனதில் ஒருவித பதட்டம் தோன்றியது. இருப்பினும்  சுதாரித்தவளாய்  பல்கலைகழக  வாயில்  நோக்கி  விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போ "ஏய் பெண்ணே..." என ஒர் அழைப்பு கேட்டு திரும்பினால்  3 ம் வருட மாணவர்களான திலக்கும் அவன் நண்பர்களும். பின் அவளை பகிடிவதை செய்ய ஆரம்பித்தனர்.   

     "ஏய் உனது பெயரென்ன?"  என திலக் அதட்டிக்கேட்டான்.
  தனது பெயரை தடுதடுத்த நாவினால் கூறினாள். அவளிடம் மேலும் பலவற்றை அதட்டி அதட்டி கேட்டுகொண்டிருந்தான் திலக் அவன் நண்பர்கள் கைகொட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அவனின்  அசிங்கமான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் அழ ஆரம்பித்தாள். அப்போதும் விடவில்லை 2  மணித்தியாலங்கள் அவளை வெயில் நிற்கும்படி கூறி திலக்கும் நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து  புதிதாக வருபவர்களை அழைத்து பகிடிவதை செய்தவண்ணம் இருந்தனர்.  

                                                          1 மணித்தியாலம்  அவள் வெயிலில் நின்றும் அவர்கள் மனம் இளகவில்லை மீண்டும் அவள் அருகில் வந்து திலக் வெறித்து அவள் கண்களை பார்த்தான். அவள் நிலத்தை நோக்கி தன் பார்வைய செலுத்தி அழுதாள்.  அப்போது திலக் கிளாஸ் நண்பன் சந்தோஷ் அங்கு வந்தான். திலக் ஜெனனியை " சந்தோஷ்க்கு உன்னை அறிமுகம் செய்... " என அதட்டினான். அவள் அவனுக்கு தன் விபரத்தை கூறினாள்.  "ஓ நீ கிராமத்து பொண்ணா...?"  என கேட்டு சிறிதாய் சிரித்தான். பின் 10 நிமிடங்களின் பின் நீ வகுப்புக்கு போகலாம் என சந்தோஷ் கூறி அவளை அனுப்பினான். மனதினுள் சந்தோஷ்க்கு நன்றி கூறி நகர்ந்தாள். திலக் கோபத்துடன் சந்தோஷை பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தான்.

                                                                           வகுப்புக்குள் நுழைந்து தன் இருக்கையில் புத்தக பொதியை  வைத்து விட்டு முகம் கழுவி வந்தமர்ந்தாள். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஜெனனியும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். " ஹாய்...." கூறியபடி அவள் அருகில் சாரு வந்து  அமர்ந்து கொண்டாள். இருவரும் நட்புடன் அறிமுகப் படுத்திக்கொண்டனர்.  இடைவேளை நேரமும் சாரு ஜெனனியுடன் இணைந்து சாப்பிட்டாள். ஒரு நாளில் இருவரும் நண்பிகளானார்கள் இருப்பினும் ஜெனனி மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது காரணம் சாரு நகரத்தில் பிறந்த வளர்ந்தவள் நாகரீகமாய் ஆடை அணிந்து அழகாக காணப்பட்டாள்.  இவளோ தாவணி போட்ட கிராமத்துப்பெண். சாரு நட்பு  ஒத்துவருமா? என  தன்னுள் கேள்வி கேட்டவண்ணம் இருந்தாள். 

                                                        ஏதுவாயினும் தற்பொழுது சாரு மூலம்  தனக்கு ஒரு ஆறுதல் கிடைத்ததாக எண்ணி  பெருமூச்சு விட்டாள். வகுப்பு முடிந்து அனைவரும் புறப்பட்டனர். சாருவை எற்றிப்போக சாரு அண்ணன் காரில் வந்து நின்றான் "  பாய்...." கூறி சாரு விடைபெற்றாள். 

                                                                                      சாரு விடைபெற்று சென்றதும் மனதில் ஒருவித படபடப்பு தோன்றிட வேகமாக பல்கலைக்கழக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சிறிது தூரம் சென்றவள். தன் பின்னால் யாரே வருவது போன்று தோன்றிட திரும்பியவள் திடுக்கிட்டாள் திலக்கும்  அவன் நண்பர்களும்  அவளை பின்தொடர்ந்து வருவதை கண்டு... கண்டும் காணாதவளாய் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவர்களே  அவள் கிராமத்தை பற்றி கிண்டல் பண்ணிய வண்ணம் தொடர்ந்தனர். அவளை அவர்கள் பின் தொடர்ந்ததற்கான காரணம் அவளின் இருப்பிடம் தெரிந்து கொள்ளவதற்காக என்பது ஜெனனிக்கு புரியவில்லை. விடுதியை சென்றடைந்ததும் திரும்பி பாரர்த்தாள் திலக் விடுதி வாசலில் நின்றுகொண்டிருந்தான்.  ஏன் என காரணம் புரியாமல் மனதில் வினாக்கள் தொடுக்க ஆரம்பித்தாள்...

                                     முதல் நாளே திலக்கின் நடவடிக்கை ஜெனனி மனதில் பயம் ஆட்கொள்ள  ஆரம்பித்தது.  முதல் தடவையாக  குடும்பத்தினரை விட்டு வெகு தூரம் வந்து தனிமையில் இருப்பது   தனக்கு வரப்போகும் பிரச்சனைகளை யும் சவால்களையும் எண்ணி அவள் மனம் கலங்கியது. தனிமையில் அழுதாள் மனம் ஏதிலும் நாட்டம் கொள்ளாமையால் தூங்க ஆரம்பித்தாள். 

                                   அவள் இருக்கும் விடுதியில் ஒரு அறையில் 2 பேர் சேர்ந்து இருக்கலாம்.  இரண்டாவது நாள்  அவள் அறைக்கு புதியளாய் வானதி இணைந்தாள். பின் இருவரும் ஒன்றாக பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர். அப்போதும் திலக் தொல்லை குறையவில்லை. 1 மாதங்களாக பகிடிவதை என்று சாட்டு கூறி ஜெனனியை தனிமையில் கூட்டிச்சென்று. பாசமாக கதைக்க ஆரம்பித்தான் பாசமாக கதைத்தாலும் தான் பாசமாக கதைத்ததாக யாருக்கும் கூறவேண்டாமென மெருட்டவும் அவன் மறப்பதில்லை. இருப்பினும் ஜெனனி முதல் வருட மாணவி என்பதால் பயம் மட்டுமே தனித்து நின்றது அவள் மனதில். 
     
                                                     பல்கலைகழகத்தில் பகிடிவதை காலம் முடிந்தது. சாரு வானதி இருவரின் நட்பும் இவளின் மனதில் தைரியத்தை கொண்டுவந்தது.  நாட்களும் உருண்டோடின. நகரவாழ்க்கைக்கு ஏற்றார்போல் தன்னையும் தன் மனதையும் மாற்றியமைத்தாள். சந்தோஷ் ஜெனனியை எதிரெதிரே காணும் போது மட்டும் நலம் விசாரித்து செல்வான். ஒரு நாள்           "  ' ஜெனனி...... "  என அழைத்த சந்தோஷை நோக்கினாள். அவளை நலம் விசாரித்த மறுகணமே அவன் அவளிடம்    தனிமையில்  திலக்குடன் கதைப்பதை குறையுங்கள்...."    கூறினான் அவள் காரணம் கேட்பதற்குள்   அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் சந்தோஷ்.

(தொடரும்.....)
" அறிந்தும் அறிமாமலும்
புரிந்தும் புரியாமலும்
மனிதர்கள் வாழ்வு நகர்கின்றது... !
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
புரிதலின்றி புதிராயானது இன்று....!"

என் தளம் வருகை தரும் உறவுகளுக்கு:- முதல் முதலில் ஒரு தொடர்கதை ஏழுதுகின்றேன் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை கூறிச்செல்லுங்கள். உங்கள் கருத்துக்களே என்னை  ஊக்கம் செய்யும்  ஆசானாய் இன்று...

Monday, February 7, 2011

Share

அன்று .! இன்று.!

அன்று .!
கண்ணாடி யன்னலூடே 
பார்வையினை சிதறவிட்டு
முன்னாடி நடந்தவற்றை
தன்  நாடியில் கைவைத்து
தன் தலையெழுத்தை எண்ணி
தனித்திருந்து யோசித்தாள்.!
இன்று.!
முன்னாடியெல்லாம் யன்னலுனூடே
அவள்  கண் நாடி நிற்பது 
தன்னவன்   வருகையினை..
இந்நாளில் அவள் கண்கள் நாடி நிற்பது
கண்ணாளன் வருவானா? இல்லையேல்
காத்திருப்பு தொடருமா?
மனப்பாரம் கூடியே 
மனச்சோர்வில் அவள்.!
அன்று .!
கடற்கரை மணலிலே
இரு கைகோர்த்து நடந்து.!
இம்சைகள் பல புரிந்து
இரு இதயம் பேசிடும் எதிர்கால 
வாழ்வை எண்ணி..
இன்று.!
இருவர் கைகோர்த்து 
இசைந்து நடந்த கடற்கரையில்
இன்னிசையாய் கடற்காற்று 
கீதமாய் அவன் நினைவு
கீறுகின்றது அவள் மனதை...!
அன்று .!
அவளுடன் அவன் இருக்கையில் 
அன்பெனும் மழையிலே
நித்தம் நனைந்தாள் மகிழ்விலே.!
இன்று.!
 தென்றல் வருடையில்
உள்ளத்து நினைவுகளில்
தென்னவன் வருடலாய்
சிலிர்த்திடும் அவளுள்ளம்...!
 அன்று .!
 இரவினிலே தனிமை தேடி
தொலைபேசி வழி அவனை தேடி
செவிவழி அவன் குரல்கேட்டு
செவ்விதழில் புன்னகையும்
சேர்ந்திருக்கும் என்நாளும்.!
 இன்று.!
கட்டுமரமாய் கவலைகள் சுமந்து
பகலெனும் நதிகடந்து
இரவெனும் கரைசேர்ந்து
தனித்திருந்து அழுதிடுவாள்...
யாரறிவார் அவள் துன்பம்.!

அன்றய நினைவுகளை மீட்டிய படி அவள் தன் வேலைகளை செய்து முடித்தாள்.
                     ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.  
                                                                                இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

(தொடரும்......)

Thursday, February 3, 2011

Share

வாழ்வில் உதயம் தந்தவளே....

 உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும்  முகாரி ராகத்தை......

உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட...
சொத்து சுகம் இருந்தும்
சோகம் தீர்ந்து
இன்பம் அளிக்கும்
உன்னத உறவாய்
உயிர் தோழியாய் இருந்த அவள்....

என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்
என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?

படத்துடன் கவிதைகளை  காண click here 

Tuesday, February 1, 2011

Share

நம் காதல் கதை...

 சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....

படத்துடன் கவிதைகளை  காண click here