Monday, July 11, 2011

Share

உன்னத உறவு....

தனிமையில் பிடியில்
இனிமைகள் தொலைந்து
பாலைவனமான வாழ்கையில்
பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது

சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.

அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..

காலங்களும் இனிமையாய் கழிய
காதலும் நம்முள் தோன்ற
பாலைவன வாழ்கை
சோலைவனங்களாக மாற
பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.

காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ
பருவங்களில் மாற்றம் வைத்த - கடவுள்
காதலிலும் புரட்சி செய்தாரோ?
இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..

இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான 
உன்னத உறவின் வரவுக்காய்.....

36 comments:

இராஜராஜேஸ்வரி said...

கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்..//

nice....

Anonymous said...

superb,,no words to express the loneliness after break up.. In love only, v can see the hell and heaven..nice one..

Anonymous said...

nice way of expressing the loneliness, In love only, v can see the heaven path to hell..nice one..yaar.. keep it up..

Praveenkumar said...

வாவ் வழக்கம் போல் அருமையான கவிதை வரிகள் தோழி. பிரிவின் கொடுமையை எடுத்துரைக்கும் வரிகளில் வலிகளை உணரமுடிகிறது.

கிராமத்து காக்கை said...

பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.
ரசிக்க தகுந்த வரிகள் தோழி

ரிஷபன் said...

இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..

எளிமையாய் வலித்த கவிதை வரிகள்.


பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது

உண்மையில் நம்மை நேசிக்கும் இதயத்தின் வருகைக்கு ஏங்கும் அடிமனசின் அதிர்வுகளை அப்படியே படம் பிடித்த கவிதை.

நிகழ்வுகள் said...

பாலைவனமாய் கிடந்த வாழக்கையை காதல் சோலைவனம் ஆக்கியது, மீண்டும் காதலின் பிரிவு வாழ்வை கடந்த காலத்துக்கே இழுத்து செல்கிறது.

கவிதை சூப்பர் ...

பிரணவன் said...

காதலையும் படைந்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைந்தாரோ என்னமோ. . .
கடவுள் உன்மையானால், காதல் உன்மையானால், கதலின் பிரிவால் வழியும் கண்ணீரும் உன்மையே. . .வாழ்த்துக்கள். . . .

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிரிவின் கொடுமையை தாங்க முடியாது தோழி...

vetha (kovaikkavi) said...

காத்திருக்கும் வலிகள் மிகக் கொடிது...காட்டுகிறது வரிகள்...
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

நிலாமதி said...

கவிதை அழகான காதலையும் பிரிவின் வலியையும் சொல்லிச் செல்கிறது . பாராட்டுக்கள.

கவி அழகன் said...

பிரிவுத்துயரை பிழிந்தெடுத்த வரில்கள்

S Maharajan said...

கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்..//

சூப்பர் தோழி...

Yaathoramani.blogspot.com said...

அருமை வஸந்த கால இன்ப உணர்வினையும்
கோடையின் கொடிய மன நிலையையும் மிக அழகாக
உறவினுள் இணைத்துச் சொல்லி இருப்பது அருமை
மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

நெல்லி. மூர்த்தி said...

"உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று"


- என்கின்ற வரிகளில் காதலின் வலிமையையும்


"கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்....."


- என்கின்ற வரிகளில் காதலின் வலியையும் அற்புதமாக படைத்திருக்கின்றீர்கள்!

கூடல் பாலா said...

பிரிவின் வலியை கண்ணில் நிறுத்தும் வரிகள் .அற்புதமான கவிதை தோழி .

arasan said...

கனத்த இதயத்துடன் கூறிய வலிகள் எங்களையும் கனக்க வைத்துவிட்டது ...

'பரிவை' சே.குமார் said...

கவிதை சூப்பர் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வரிகள் ...
பிரிவின் வலியை பேசுகிறது..

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நன்று பாரட்டுக்கள் வாழ்க வளமுடன் மென் மேலும் எழுத்துலகில் சிறந்து வளர வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Prabu Krishna said...

காதல் உருக்கம்..... நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?

அருமையான கவிதை தோழி.

vidivelli said...

இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்!!!


அருமையான கவிதை...
பிரிவின் வலிகள் படமாய் இருக்கு கவிதையில்...
வாழ்த்துக்கள்...




can you come my said?

கவிதை பூக்கள் பாலா said...

''இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்.....''

valiiin karanam enna ariya mudiyumaa , intha valiil ethaarththam unmai irukku
unmaiyaai iruppin ennathu aazhntha varuththakkal , illai enral vazhththukkal

Mahan.Thamesh said...

இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்.....

ஓர் உன்னதமான உறவின் பிரிவு மிக அருமையாக உங்கள் கவியில் . படிக்கும் போது ஒவ்வொரு வரியும் வலிக்கிறது .

சரியில்ல....... said...

"உன்னத உறவு"... அடடா,,, என்ன ஒரு வார்த்தை... உறவுகிளிலேயே ஒரு சில உறவுகள் தான் உன்னதமாக இருக்கும்....

the critics said...

மீண்டும் "பாலைவன வாழ்க்கையில் வறுமையின் பிடியில் கண்ணீருடன் காத்திருக்கிறேன்"........... அருமையனா வரிகள் .........

மாலதி said...

//கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான
உன்னத உறவின் வரவுக்காய்.....//அருமையான கவிதை

ஹேமா said...

மனம் வலிக்க வலிக்க எழுதிக்கொண்டேயிருக்கிறீர்கள்.முடிவில்லாத அன்பின் விதி இதுதானோ !

இராஜராஜேஸ்வரி said...

என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..//

அருமையான உறவு.

மாய உலகம் said...

//காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ//

உறவுகள் என்பது பொய் என்றால் சிறகுகள் தந்து முறிப்பது ஏன்.....

மாய உலகம் said...

//அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..//

உன்னத உறவு கவிதை உண்மையில் உன்னதம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேரம் போதாமையால் தனித்தனியான பதில் தரமுடியவில்லை மன்னிக்கனும் உறவுகளே...
வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..

Unknown said...

உறவுகள் என்னும் கவிதை சூப்பர்
காறனம் தேரியாத உறவுகள்
காலத்தை காட்டு
கண்னிர்துளிகளையும் காட்டும்

Unknown said...

உறவுகளை புதுப்பிக்க இனிய காலை மலர்ந்தது...காலை வணக்கம் உறவுகளே...

நன்றி








Unknown said...

சூப்பர்