Sunday, November 27, 2011

Share

நட்பு..



எண்ணங்கள் ஒன்றானதால்
எதிர்பார்ப்பு எதுமின்றி
உருவான துணை ஒன்று - என்
வாழ்வில் உற்ற துணையானது 
உயிர் நட்பாய்...

சுற்றி சுற்றி வட்டமிடும்
இவ் வாழ்வில்
கட்டங்கள் பல கடந்து
சட்டங்கள் பல தாண்டி
திட்டமிட நல் வாழ்வை
உடனிருந்து திடமாய் - என்றும்
உழைப்பது உண்மை நட்பு..

தனக்கென இல்லாது
நமக்கென அனைத்தையும்
பகிர்ந்திட்ட போதிலும்
பழியினை தான் ஏற்று
பாரினில் என் புகழ் வாழ
பக்குவாய் பக்கத்திலிருந்து
உழைக்குது நட்பு..

உறவேதும் இல்லாது
உணர்வால் உருவான உறவு இங்கே
உதிரத்தினை உழைப்பாக்கி - தன்
உயிரிலும் மேலான எனை தாங்கி
உண்மை நட்பின் உன்னததை
உலகுங்கு பறை சாற்றுகிறது இங்கே...

8 comments:

கவி அழகன் said...

உறவேதும் இல்லாது
உணர்வால் உருவான உறவு இங்கே
உதிரத்தினை உழைப்பாக்கி - தன்
உயிரிலும் மேலான எனை தாங்கி
உண்மை நட்பின் உன்னததை
உலகுங்கு பறை சாற்றுகிறது இங்கே...

முதல் நட்பு வாழ்த்துக்கள் நண்பி

ஓசூர் ராஜன் said...

நல்ல நட்பு மட்டும் ஒருவருக்கு இருந்தால்... வானமே அவருக்கு வசப்படும்! நட்பு நல்லது!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

அர்த்தமில்லா வார்த்தைகளாய் சிதறிக் கிடந்த
என்னை கோர்த்து கவிதை ஆக்கியவன்..
என் நண்பன்..

மகேந்திரன் said...

////கட்டங்கள் பல கடந்து
சட்டங்கள் பல தாண்டி
திட்டமிட நல் வாழ்வை
உடனிருந்து திடமாய் - என்றும்
உழைப்பது உண்மை நட்பு..////

அருமையான வரிகளால்
நட்புக்கு நல் ஆரம் சூட்டி
அருமையான கவிதை படைத்துவிட்டீர்கள் சகோதரி...

Unknown said...

Nalla kavithai..

A.M.Askar said...

நட்பின் வரிகள் நச்சென்று இருக்கிறது நல்ல கவிதைகளை படைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதைகளை தொகுப்பாக வெளியிட்டால் நன்றாகயிருக்குமே...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்! நான் பதியுலகில் புதியவன். அழகான அருமையான கவிதை. வாழ்த்துக்கள். நன்றி சகோதரி.
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"