இறந்த போன
உணர்வுகளுக்கும்
நாடி நரப்புகளில் புகுந்து
புத்துயிர் அளிக்கும்
அதிசயத்தை
உணர்ந்து கொண்டேன்
அவள் சொரியும்
ஒட்சிசனான பாசத் துளிகளில்..
இடி விழுந்த சோகம்
வாழ்க்கை விழுக்கும்
தருணங்களிலும்
தலை நிமிரும் சூட்சுமம்
அறிந்து கொண்டேன்
அச்சுணனின் வில்லாய்
அவளின் துணிவில்..
பூக்களுக்குள்ளும்
பூகம்பம் உண்டு என்று
புரிந்து கொண்டேன் - அவளின்
வார்த்தைகளின் பிரளயத்தில்..