Wednesday, June 20, 2012

Share

மரண வாசல் திறக்கும் வரை...



என்னை சுற்றி பல உறவுகள் 
இருந்து என்ன பயன்..?
மனதில்
தனிமையை சொந்தமாக்கி..
நடிப்பே வாழ்க்கையாகி...
நாடித்துடிப்பின்றி நடைப்பிணமாய்...
நால்வர் முன் போலியாய் சிரித்து...
தனிமையிலே கண்ணீர் சிந்தி...
என்னை நானே சமாதாப்படுத்தி..
இறைவனிடம் முறையிட்டு...
என் மனதை திடப்படுத்து...
காலத்தை நகர்த்துகின்றேன்...
மரண வாசல் திறக்கும் வரை...