Monday, January 14, 2013

Share

உன் நினைவுகளை சுமந்தபடி.


பரந்து
இருட்டிக் கிடக்கிறது
வானம்.
அதில்
ஆங்காங்கே
பூத்துக் கிடக்கிறது
நட்சத்திரங்கள்
மனிதர்களின்
இன்பமும் துன்பமும் போல..

வானத்து சூரியன்
மறைந்து போயாச்சு
உச்சத்து நிலவும்
பயணிக்க தொடங்கியாச்சு,
ஊரும் உறங்கி
வெறிச்சோடிக் கிடங்கிறது
தெருக்கள்.
ஆனால்,
ஓய்வின்றி
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்
மறக்க முடியாத
உன் நினைவுகளை
சுமந்தபடி.

-தோழி பிரஷா-

0 comments: