Tuesday, April 30, 2013
Friday, April 19, 2013
Share
நினைவுகள்
மனதுள் போராட்டம்
மகிழ்வில்லா வாழ்க்கை..!
மாசுபட்ட உள்ளங்கள் நடுவே
மாறிடா என் உள்ளம்..!
மின்மினியாய் வந்து செல்லும்
சில சந்தோஷங்கள்
மீண்டும் கிடைக்குமா?
மீண்டிட தான் முடிந்திடுமா?!
முன்னோக்கி சிந்தித்தால்
முள்ளாக பல நினைவு
மூச்சுக் குடிக்கும்
மூலதனமாய் சோகங்கள்..!
மெல்லிய தென்றலாய்
பல நினைவுகள்
மெல்லிய வலியாய்
சில நினைவுகள்
மேடை போட்டு காட்டுதிங்கு
மேலோர் கீழோர் உள்ளங்களை..!
மையம் கொண்ட
மன உளச்சல்
மொத்தமாய்
கொன்றது உள்ளமதை..!
மோதலில் தோற்ற
படைவீரனாய்
மௌனம் கொண்டது
என் விம்மல்...!
-தோழி பிரஷா-
17.04.2013
Thursday, April 18, 2013
Share
நிஜமான ஒரே ஜீவன் நீ
மொத்தமாய்
கொள்யைடித்தாய்
என்னை..!
குழந்தையாய்
தவழ துடித்தது
மனம்
உன் மடியில்....!
வந்தாய் என்னுள்
தந்தாய் பலதை
விதைத்தாய் நம்பிக்கையை
என்னுள்
வளர்கிறேன்
ஆல விருட்சமாய்
இன்னும்...!
சிரிக்கிறது
பல முகம்
போலியாய்..
வெறுக்கிறாய்
இன்று.
சிரிக்கிறேன் நான்.
நிஜமான ஒரே
ஜீவன் நீ என...!
-தோழி பிரஷா-
15.04.2013
Sunday, April 14, 2013
Wednesday, April 3, 2013
Share
யன்னல் ஓரத்து ஒற்றை ரோஜா...
சில்லென்று காற்றில்
சிணுக்கிக் கொண்டே
எழுந்திருந்தேன்.
அதிகாலை நேரத்தில்
அறிவுரை சொன்னது - என்
யன்னல் ஓரத்து
ஒற்றை ரோஜா.
காலையில்
உயிரத்து
மாலையில் மடியும்
மலர்கள் எல்லாம்
எவ்வளவு சந்தோஷமாய்
வாழ்கிறேன
மனிதனே!
வாழும் சொற்ப
காலத்தில்
சந்தோசமாக வாழு என...”
”நாளை வருவதை எண்ணி இன்றே வாடிவிடாதே..!” இன்றய நாளில் வருவதை சந்தோஷமாக ஏற்று வாழ பழகிக்கொண்டால் மனதில் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்...”
<3<3தோழி பிரஷா<3<3
<304.04.2013<3
Tuesday, April 2, 2013
Share
இதயவீட்டில்
இதயவீட்டில்
இரக்கமற்றவர்கள்
குடியேற்றம்
கலகத்துடன்
சலணத்தையும்
நாளும் தந்து தான்
செல்கின்றது..!
இறைவா..!
இரக்கமற்றவர் மனதினிலே
ஈரத்தை கொடுத்திடு
ஒரு துளி
அன்பென்றாலும் கசியட்டும்
அவர் தம் மனதிலிருந்து...!
தோழி பிரஷா
02.04.2013
Monday, April 1, 2013
Share
நானும் ஒரு குழந்தையாய்....!
வேதனையால்
துடிக்கிறேன்.
நான் இருக்கிறேன்
உன் சுமை தாங்க..
அணைத்துக் கொள்கிறது,
அன்பினால் ஒரு கரம்...!
முழுவதுமாய்
எனை மறந்து
அவன் நெஞ்சில்
சாயும் போது
தவழ்கிறேன்
நானும் ஒரு குழந்தையாய்....!
--தோழி பிரஷா--
02.04.2013
Subscribe to:
Posts (Atom)