Tuesday, April 30, 2013

Share

ஆயுள்


சேர்ந்து வாழும்
காதலை விட
பிரிந்து வாழும்
காதலுக்கே
ஆயுள் நீளமானது..!

-தோழி பிரஷா-
22.04.2013

Friday, April 19, 2013

Share

பாசம்


பாசம் 
காலம் கடந்து
பாதை மாறிப் 
போனாலும்..!
அது தந்த
சுமைகள்
சுகங்களும்
என்றும் அழியாதவை..!

-தோழி பிராஷா-
18.04.2013
Share

அன்னை


அள்ளிக் கொடுக்கும்
அன்னை 
அன்பை வெல்ல
அகிலமதில்
 ஏதும் இல்லை...
அன்னையை 
நாளும் தொழுதிடு...
அன்பால் 
அகிலமதை வென்றிடு”

-தோழி பிரஷா-
17.04.2013
Share

நினைவுகள்


மனதுள் போராட்டம்
மகிழ்வில்லா வாழ்க்கை..!
மாசுபட்ட உள்ளங்கள் நடுவே
மாறிடா என் உள்ளம்..!

மின்மினியாய் வந்து செல்லும்
சில சந்தோஷங்கள்
மீண்டும் கிடைக்குமா?
மீண்டிட தான் முடிந்திடுமா?!

முன்னோக்கி சிந்தித்தால்
முள்ளாக பல நினைவு
மூச்சுக் குடிக்கும்
மூலதனமாய் சோகங்கள்..!

மெல்லிய தென்றலாய் 
பல நினைவுகள்
மெல்லிய வலியாய் 
சில நினைவுகள்
மேடை போட்டு காட்டுதிங்கு
மேலோர் கீழோர் உள்ளங்களை..!

மையம் கொண்ட 
மன உளச்சல்
மொத்தமாய் 
கொன்றது உள்ளமதை..!
மோதலில் தோற்ற 
படைவீரனாய்
மௌனம் கொண்டது 
என் விம்மல்...!

-தோழி பிரஷா-
17.04.2013

Thursday, April 18, 2013

Share

நிஜமான ஒரே ஜீவன் நீ


மொத்தமாய்
கொள்யைடித்தாய்
என்னை..!

குழந்தையாய் 
தவழ துடித்தது
மனம் 
உன் மடியில்....!

வந்தாய் என்னுள்
தந்தாய் பலதை
விதைத்தாய் நம்பிக்கையை
என்னுள்
வளர்கிறேன் 
ஆல விருட்சமாய்
இன்னும்...!

சிரிக்கிறது
பல முகம்
போலியாய்..
வெறுக்கிறாய்
இன்று.
சிரிக்கிறேன் நான்.
நிஜமான ஒரே
ஜீவன் நீ என...!

-தோழி பிரஷா-
15.04.2013

Share

அனுபங்கள்


அனுபங்கள் 
கற்று தந்தது
வாழ வழி 
மட்டும் அல்ல
வாழ்வில் 
வந்து போகும்
மாற்றங்களையும்
மாறி செல்லும் 
மனித
 குணங்களையும்...

”வாழ்வில் வந்து போகும் துன்பங்கள்
வாழ்வின் வழிகாட்டிகள்”

-தோழி பிரஷா
12.04.2013
Share

நிழலாய் ..!


கலங்கரை விளக்காய்
காத்திருந்து...!
உருகியது உள்ளம்
பெரிகியது கண்ணீர்...!
விழிகளும் தோற்றது
கசிந்திட கண்ணீர் இன்றி...!
நினைவுகள் மட்டும்
நிழலாய் என்னுடன்
நீயோ நிம்மதியாய்
என்னை மறந்து...!

-தோழி பிரஷா-
11.04.2013

Share

ஒற்றை நிலவு



ஒற்றை நிலவு
ஓராயிரம் 
விண்மீன்கள்
பற்றியெரியும் 
பல்லாயிரம்
 நினைவுகள்-என்
உறக்கத்தை 
தொலைத்த
உறங்காத விழிகள்..!

-தோழி பிரஷா-
09.04.2013

Sunday, April 14, 2013

Share

தேடலும், ஊடலும்


காதலும்
காதலர்களும்
இனிமையானதே
ஆனால்
அவர்களின்
தேடலும், ஊடலும்
இன்பத்தையும்
துன்பத்தையும்
பிரசவிக்கும்
வாய்ப்பை 
அளிக்கிறது!

-தோழி பிரஷா-
08.04.2013
Share

இழப்புக்கள்


நேற்றைய 
இழப்புக்கள்
இன்றைய - என்
வெற்றியின்
மூலதனங்கள்..

-தோழி பிரஷா-
08.04.2013
Share

நிஜங்களை சுமந்து



"நீ 
என்னை மறந்
து பல நாட்கள்
தெரிந்தும் 
ஏனோ மனம்
அதை ஏற்க தான் 
மறுக்கின்றது..
நிஜங்களை சுமந்து
உன் நினைவுகளோடு
நித்தம் நான்..”

-தோழி பிரஷா-
06.04.2013

Wednesday, April 3, 2013

Share

யன்னல் ஓரத்து ஒற்றை ரோஜா...


சில்லென்று காற்றில்
சிணுக்கிக் கொண்டே
எழுந்திருந்தேன்.
அதிகாலை நேரத்தில்
அறிவுரை சொன்னது - என்
யன்னல் ஓரத்து
ஒற்றை ரோஜா.
காலையில்
உயிரத்து
மாலையில் மடியும் 
மலர்கள் எல்லாம்
எவ்வளவு சந்தோஷமாய்
வாழ்கிறேன
மனிதனே!
வாழும் சொற்ப
காலத்தில்
சந்தோசமாக வாழு என...”

”நாளை வருவதை எண்ணி இன்றே வாடிவிடாதே..!” இன்றய நாளில் வருவதை சந்தோஷமாக ஏற்று வாழ பழகிக்கொண்டால் மனதில் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்...”

<3<3தோழி பிரஷா<3<3
<304.04.2013<3

Tuesday, April 2, 2013

Share

இதயவீட்டில்


இதயவீட்டில்
இரக்கமற்றவர்கள்
குடியேற்றம்
கலகத்துடன்
சலணத்தையும்
நாளும் தந்து தான்
செல்கின்றது..!
இறைவா..!
இரக்கமற்றவர் மனதினிலே
ஈரத்தை கொடுத்திடு
ஒரு துளி 
அன்பென்றாலும் கசியட்டும்
அவர் தம் மனதிலிருந்து...!

தோழி பிரஷா
02.04.2013

Monday, April 1, 2013

Share

நானும் ஒரு குழந்தையாய்....!


வேதனையால்
துடிக்கிறேன்.
நான் இருக்கிறேன்
உன் சுமை தாங்க..
அணைத்துக் கொள்கிறது,
அன்பினால் ஒரு கரம்...!
முழுவதுமாய் 
எனை மறந்து
அவன் நெஞ்சில் 
சாயும் போது
தவழ்கிறேன்
நானும் ஒரு குழந்தையாய்....!

--தோழி பிரஷா--
02.04.2013