Friday, June 28, 2013

Share

என்னை மறந்தேனடா...!

உன்னை கண்ட
அந்த நொடி
என்னை
மறந்தேனடா...!
ஆகாயத்தை
அண்மித்ததாய் 
ஆனந்தம் 
கொண்டேனடா...!

-தோழி பிரஷா-

Thursday, June 13, 2013

Share

வாழ்வில் ஆயிரம் பாடம்

சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!

உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!

தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!

காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!

கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும் 
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????

உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!

ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!

--தோழி பிரஷா--
14.06.2013
Share

உண்மையான் பாசம்...!

சந்தோஷங்களை சேமித்து
துன்பங்களை களைந்து
இன்பங்களில் கூடி
நல்லவைகளை சேமித்து
பிழைகளை மன்னித்து.
விவாதங்களை தவிர்த்து
உறவுகளை அணைப்பதே 
உண்மையான் பாசம்...!

தோழி பிரஷா
-12.06.2013
Share

என் செல்ல மகளே..!

ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!

தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!

தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!

என் தேவதை நீயடி-உன் 
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால் 
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!

-தோழி பிரஷா-
07.06.2013
Share

மனித வாழ்வில்..!

வாழ்க்கை
அது பட்டம்
போன்றது!
நுாலைப் பிடித்திருப்பவரின்
திறமையின் நிமித்தம்
அது உயரப் பறக்கும்.
அதுபோல்
வாழ்க்கையும்
பாசம் எனும்
பிணைப்பில் சரியாக 
அமைந்து விட்டால்
வேதனைகளும் 
சோதனைகளும்
வேண்டாத 
விருத்தாளிகளாவர்
மனித வாழ்வில்..!

-தோழி பிரஷா-
26.05.2013
Share

உள்ளம்...!


பாசம் கொண்ட 
உள்ளங்கள்
ஏனோ..!
பாசாங்காய் பேசி 
மறையும் போது
வேர் அறுந்த மரமாய்
உள்ளம் வாடி தான் 
போகின்றது...!

-Tholi Pirasha-
24.05.2013
Share

வாழ்வில்...!

காதல்..!
சிரித்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

நட்பு...!
வலியால்
துடிக்கும் போது
எழுந்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

-தோழி பிரஷா-
23.05.2013
Share

தேடி தேடி தோற்றேன்..!

எங்கே 
பாசமான உள்ளம்..!
உண்மையான பாசம்..!
விசுவாசமான நேஷம்...!
எதற்காகவும் என்னை 
இழக்காத உறவு...!
எனக்காகவே வாழும் 
ஜீவன்...!
தேடி தேடி தோற்றேன்..!
தோல்வியே வாழ்வானது
யாவுமே போலியானது..!

-தோழி பிரஷா-
22.05.2013
Share

ஒரே ஒரு சொர்க்கம்

காலத்தின் 
ஆளுகைக்குள்
எங்கும் கிடைக்காத
ஒரே ஒரு
சொர்க்கம்
அம்மா.

-தோழி பிரஷா-
12.05.2013
Share

மனதின் போராட்டம்...!

நேற்றய பொழுதில்
நிச்சயம் உன் 
மனதை ஆழமாய் 
தெரிந்து கொண்டேன்
உன்னுள் நானில்லையென..!

துடுப்பில்லா படகாய்
தள்ளாடும் என் மனம்
புரிந்திடா உன் முன்
போலியாய் பேசிடத்தான்
முடியவில்லை...!

என் மேல் 
பலமுறை வலியெனும் 
நெருப்பை வீசி சென்றாய்...!
மிண்டும் அணைத்திடும்
நீராய் என் முன் நீ!!!!

ஆனால்
அணையாத வலி தீயை
அள்ளி வீசி 
மறைந்தாய் நேற்றய 
பொழுதினில்...!
அணைத்திட என்னாதே..!
உன்னையும் 
வலியெனும்
தீ பற்றி கொள்ளும்..!

உன் எண்ணங்கள் மாறலாம்
உடை நடை மாறலாம்
பாசங்கள் மாறலாம்
என் மேல் வீசிய வலியனை
உன்னை நம்பும் 
இன்னொருவர் மேல்
வீசிவிடாதே...!

உன் எண்ணம் போல்
யாவும் அமையாது..!
நீ நினைப்பது போல்
எல்லோர் உள்ளங்களும்
இருக்காது..!
மீண்டும் தப்பு செய்யாதே
மீண்டிட முடியாது 
துடிக்காதே...!

உன்னை நம்பும் ஜீவனை
உயிருள்ளவரை 
உயிரை கொடுத்து 
காத்து நில்..!

உன் வாழ்வில் 
யாவும் என்னுடன்
முடிவுற வேண்டும்
உன்னிடம் பாசத்துக்காய்
யாரையும் ஏங்க வைத்த 
ஏழ்மை படுத்தி விடாதே..!

பணத்தில் வறுமை-மனதில்
பாதிப்பு ஏனோ குறைவு..!
பாசத்தில் வறுமை
புற்று நோயாய்
நாளும் இறக்க 
வைத்து விடும்...!

-தோழி பிரஷா-
03.05.2013
Share

என்னுள் நீ...!

பெளர்ணமிகள் பல
கடந்து விட்டன
எனினும்
அவள் நினைவுகள்
மட்டும்
பட்டை தீட்டிய
வைரமாய் 
என்னுள்.....

-தோழி பிரஷா-
27.04.2013
Share

ஒற்றை ரோஜாவாய்...!

முட்கள் 
நடுவே சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்..!
தனித்தே 
சிரித்திருப்பேன்
உன்னையும்
உன்னோடான
நினைவுகளையும்
என்னுள் சுமந்தபடி..!

-தோழி பிரஷா-
23.04.2013